திருகோணமலையில் கடற்றொழிலாளர்கள் வீதி மறித்து போராட்டம்

Sri Lankan Peoples SL Protest Eastern Province
By H. A. Roshan Jun 05, 2025 08:40 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியை மறித்து திருக்கடலூர் பிரதேச கடற்றொழிலாளர்கள் இன்று (05)கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனை கடற்பரப்பில் தங்களது கடற்றொழிலாளர்களையும் படகையும் சேதத்துக்கு உள்ளாக்கி தாக்கியவர்களை கைது கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான அறிவிப்பு

தங்கம் வாங்கவுள்ளோருக்கு வெளியான அறிவிப்பு

வீதி மறித்து போராட்டம்

இதன்போது பல வசாகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் ஒரு சில மணி நேரம் அப்பகுதி போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

திருகோணமலையில் கடற்றொழிலாளர்கள் வீதி மறித்து போராட்டம் | Trincomalee Fishermen Protest

கடற்றொழிலாளியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?, மீனவனின் நிலமையை பார் உட்பட பல பதாகைகளை ஏந்தியிருந்தனர். இதில் பல நூற்றுக் கணக்கான கடற்றொழிலாளர் குடும்பங்கள் வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குச்சவெளி சம்பவம் தொடர்பில் கண்டனம் வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்

குச்சவெளி சம்பவம் தொடர்பில் கண்டனம் வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்

சாய்ந்தமருதுவில் 150 வேப்பமரம் நடும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

சாய்ந்தமருதுவில் 150 வேப்பமரம் நடும் செயற்றிட்டம் முன்னெடுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW    
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery