திருகோணமலையில் கடற்றொழிலாளர்கள் வீதி மறித்து போராட்டம்
திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியை மறித்து திருக்கடலூர் பிரதேச கடற்றொழிலாளர்கள் இன்று (05)கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வாழைச்சேனை கடற்பரப்பில் தங்களது கடற்றொழிலாளர்களையும் படகையும் சேதத்துக்கு உள்ளாக்கி தாக்கியவர்களை கைது கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வீதி மறித்து போராட்டம்
இதன்போது பல வசாகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் ஒரு சில மணி நேரம் அப்பகுதி போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
கடற்றொழிலாளியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?, மீனவனின் நிலமையை பார் உட்பட பல பதாகைகளை ஏந்தியிருந்தனர். இதில் பல நூற்றுக் கணக்கான கடற்றொழிலாளர் குடும்பங்கள் வீதி மறியல் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







