சாய்ந்தமருதுவில் 150 வேப்பமரம் நடும் செயற்றிட்டம் முன்னெடுப்பு
Clean SriLanka வேலைத்திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சர்வதேச சுற்றாடல் தினம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த திட்டமானது, நேற்று (04) இடம்பெற்றது.
"நில மீட்பு, பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான தாங்கு திறன்" எனும் தொனிப்பொருளின் கீழ் இவ்வருட உலக சுற்றாடல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
சூழல் சுத்தம்
அதற்கமைய, கல்முனையில் ஆற்றங்கரை சூழலை சுத்தம் செய்யும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதில் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்திற்கு உட்பட்ட ஆற்றங்கரை பிரதேசத்தை சுத்தம் செய்து 150 வேப்ப மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் நடைபவனி ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.
அதேவேளை, இந்த நடைபவனியானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொதுமக்களின் பொறுப்புணர்வை வளர்க்கவும் நோக்கமாகக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம்.ராபி, சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஹ்பிகா உள்ளிட்ட மாநகர சபை உத்தியோகத்தர்கள், இளைஞர் விளையாட்டு கழக அமைப்புக்கள், மாணவர்கள், சுற்றாடல் முன்னோடி கழகம் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு தங்களது முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



