கல்முனையில் கோழி வளர்ப்பு ஆதரவு திட்டம் முன்னெடுப்பு
கல்முனையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பண்ணையாளர்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆதரவு திட்டமானது நேற்று (04) கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மேலும் இந்த திட்டமானது, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை நிலைப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கோழி வளர்ப்பு ஆதரவு
கல்முனை கால்நடை வைத்தியர் நிவேர்த்திகா அஹிலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எம்.ஜே.நௌசாட் ஜமால்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட 50 பண்ணையாளர்களுக்கு தலா 16 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கோழிக்குஞ்சிகளை வழங்கி வைத்தார்.
அதேவேளை, கிழக்கு மாகாண குறிப்பிட்ட மேம்பாட்டு மானியம் (PSDG) நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்ட இந்த உதவி மூலம் பண்ணையாளர்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், இந்த நிகழ்வில் கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |