கல்முனையில் கோழி வளர்ப்பு ஆதரவு திட்டம் முன்னெடுப்பு

Sri Lankan Peoples Eastern Province Kalmunai
By Rakshana MA Jun 05, 2025 05:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பண்ணையாளர்களுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆதரவு திட்டமானது நேற்று (04)  கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மேலும் இந்த திட்டமானது, வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களை நிலைப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குச்சவெளிச்சம்பவம் தொடர்பில் இம்ரான் எம்.பிக்கு பதிலளித்த பொதுபாதுகாப்பு பிரதி அமைச்சர்

குச்சவெளிச்சம்பவம் தொடர்பில் இம்ரான் எம்.பிக்கு பதிலளித்த பொதுபாதுகாப்பு பிரதி அமைச்சர்

கோழி வளர்ப்பு ஆதரவு 

கல்முனை கால்நடை வைத்தியர் நிவேர்த்திகா அஹிலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எம்.ஜே.நௌசாட் ஜமால்தீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட 50 பண்ணையாளர்களுக்கு தலா 16 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கோழிக்குஞ்சிகளை வழங்கி வைத்தார்.

கல்முனையில் கோழி வளர்ப்பு ஆதரவு திட்டம் முன்னெடுப்பு | Kalmunai Poultry Support Program

அதேவேளை, கிழக்கு மாகாண குறிப்பிட்ட மேம்பாட்டு மானியம் (PSDG) நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கப்பட்ட இந்த உதவி மூலம் பண்ணையாளர்கள் பயனடைந்துள்ளனர்.

மேலும், இந்த நிகழ்வில் கல்முனை கால்நடை வைத்தியர் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் முன்மாதிரி செயற்பாடுகள்

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் முன்மாதிரி செயற்பாடுகள்

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW