குச்சவெளி சம்பவம் தொடர்பில் கண்டனம் வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்

Sri Lanka Politician Sri Lankan Peoples
By Rakshana MA Jun 04, 2025 12:00 PM GMT
Rakshana MA

Rakshana MA

திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தை சேர்ந்த கடற்றொழிலாளர் இஜாஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ் தௌபீக் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு துப்பாக்கிச்சூடு நடாத்திய கடற்டையினர் மீது உடனடி சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென பாதுகாப்பு தரப்பினரிடம் தான் வேண்டுகொள் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 86 மாணவர்கள்

மட்டக்களப்பில் அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 86 மாணவர்கள்

முன்வைக்கப்பட்ட கோரிக்கை

குச்சவெளி பிரதேசத்திலிருந்து திருகோணமலை கடலுக்குச் சென்ற இஜாஸ் என்ற கடற்றொழிலாளர் மீது, கடற்படையினரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குச்சவெளி சம்பவம் தொடர்பில் கண்டனம் வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் | Kuchchaveli Fisherman Shooting

இந்த சம்பவம் அவரது குடும்பத்திற்கு மிகுந்த கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடற்றொழிலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் மனிதாபற்ற தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் பாதுகாப்பாக, அச்சமின்றி தொழிலுக்கு சொல்லக்கூடிய சூழ்ந்நிலையை இந்த அரசு உருவாக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டுநகரில் திறந்து வைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம்

மட்டுநகரில் திறந்து வைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம்

புலைமைப்பரிசில் பரீட்சையை நிறுத்துவது தொடர்பில் வெளியான தகவல்

புலைமைப்பரிசில் பரீட்சையை நிறுத்துவது தொடர்பில் வெளியான தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW