தொடரும் கடும் மழை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

Sri Lanka Climate Change Weather Rain
By Faarika Faizal Oct 22, 2025 04:00 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

வடக்கு கடற்கரைக்கு அருகில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வளர்ச்சியடைந்து வடமேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(22.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இன்று மாலையில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் மரக்கறிகளின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

சீரற்ற வானிலையால் மரக்கறிகளின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்

பலத்த காற்று மற்றும் மின்னல்

இதன் விளைவாக, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் கடும் மழை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு | Today Weather Report

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும், இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. 



You May Like This Video...

நூற்றுக்கு மேற்பட்ட குற்றவாளிகளை தப்பிக்கச் செய்து ஜே.கே பாய்

நூற்றுக்கு மேற்பட்ட குற்றவாளிகளை தப்பிக்கச் செய்து ஜே.கே பாய்

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கங்களின் பேரவைக்கு பிரதமர் பாராட்டு

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கங்களின் பேரவைக்கு பிரதமர் பாராட்டு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW