எதிர்வரும் நாட்களில் வானிலையில் நிகழவுள்ள மாற்றம்

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Aug 30, 2024 02:45 AM GMT
Rukshy

Rukshy

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 06ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று (30) நண்பகல் 12.11 அளவில் வவுனியா, வண்ணாமோட்டை, அனல்கட்டிமடி மற்றும் பெரியபண்டிவிரிச்சான் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

தபால் மூல வாக்களிப்பின் போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்! வெளியாகியுள்ள விபரம்

தபால் மூல வாக்களிப்பின் போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்! வெளியாகியுள்ள விபரம்

பலத்த காற்று

இந்நிலையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் வானிலையில் நிகழவுள்ள மாற்றம் | Today Weather In Sri Lanka

குறிப்பாக புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தற்காலிகமாக பலத்த காற்று

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

எதிர்வரும் நாட்களில் வானிலையில் நிகழவுள்ள மாற்றம் | Today Weather In Sri Lanka

மேலும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அம்பாறையில் வீடொன்றில் புதையல் தோண்டிய இருவர் கைது

அம்பாறையில் வீடொன்றில் புதையல் தோண்டிய இருவர் கைது


குழந்தைகளுக்கு பாராசிட்டமால் கொடுக்கும் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கு பாராசிட்டமால் கொடுக்கும் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW