நாட்டின் பல பகுதிகளில் ஏற்படப்போகும் வானிலை மாற்றம்

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Mar 02, 2025 02:55 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் இன்று(02) பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம்(Department of Meteorology) தெரிவித்துள்ளது.  

இன்றைய நாளுக்கான (02) வானிலை குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுப்பு

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டம் முன்னெடுப்பு

வானிலை மாற்றம் 

இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் பல பகுதிகளில் ஏற்படப்போகும் வானிலை மாற்றம் | Today Sri Lanka Climate Change

இந்த நிலையில், ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும்! ஜனாதிபதி

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்படும்! ஜனாதிபதி

காலநிலை மாற்றம்

அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என கூறியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் ஏற்படப்போகும் வானிலை மாற்றம் | Today Sri Lanka Climate Change

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

ஆகவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.  

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திடீரென மூடப்பட்ட யால தேசிய பூங்கா

திடீரென மூடப்பட்ட யால தேசிய பூங்கா

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW