இன்று முதல் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Department of Meteorology Climate Change Weather
By Rukshy Jul 30, 2024 02:28 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று முதல் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.

சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

இடியுடன் கூடிய மழை

வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும்.

பதுளை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இன்று முதல் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Today Climate Change Sri Lanka

இந்நிலையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30-40 வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலய மாணவி மாவட்ட மட்ட போட்டிக்குத் தெரிவு

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலய மாணவி மாவட்ட மட்ட போட்டிக்குத் தெரிவு

அமெரிக்க பூங்கா ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி: பலர் காயம்

அமெரிக்க பூங்கா ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி: பலர் காயம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW