பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA May 08, 2025 03:05 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் பல பகுதிகளில் இன்று(08) பிற்பகலின் பின்னர் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வானிலை குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய வீடியோவை வெளியிட்ட இந்திய இராணுவம்

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய வீடியோவை வெளியிட்ட இந்திய இராணுவம்

வானிலை மாற்றம்

இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாட்டின் ஏனைய சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை | Today Climate Change In Sri Lanka

அதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

ஆகவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காத்தான்குடியில் தீப்பற்றி எரிந்த வர்த்தக நிலையம்

காத்தான்குடியில் தீப்பற்றி எரிந்த வர்த்தக நிலையம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW