இலங்கையில் இன்றைய காற்றின் தரம் குறித்து வெளியான தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Air Pollution
By Rakshana MA May 13, 2025 07:26 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகைப்பரீட்சை நம்பிக்கை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை

காற்றின் தரச் சுட்டெண்

அந்த அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் நல்ல நிலையில் இருந்தது, அதேவேளை, குருநாகல், கண்டி, கேகாலை, காலி, புத்தளம், பதுளை, களுத்துறை மற்றும் அநுராதபுரம் ஆகியவற்றில் மிதமான நிலை காணப்பட்டது.

இலங்கையில் இன்றைய காற்றின் தரம் குறித்து வெளியான தகவல் | Today Air Quality Sri Lanka

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் தரச் சுட்டெண் 33 மற்றும் 80 க்கு இடையில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் நல்ல நிலையிலும், கொழும்பு, குருநாகல், கண்டி, கேகாலை, காலி, புத்தளம், பதுளை, களுத்துறை மற்றும் அநுராதபுரம் ஆகியவற்றில் மிதமான நிலையிலும் காணப்படும்.

நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவு

நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவு

போக்குவரத்து நெரிசல்

நாட்டின் பெரும்பாலான நகரங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் தரம் ஆரோக்கியமான நிலையில் காணப்படும். அதிகமாக போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

இலங்கையில் இன்றைய காற்றின் தரம் குறித்து வெளியான தகவல் | Today Air Quality Sri Lanka

குறிப்பாக காலை 8 மணி முதல் 9 மணி வரை மற்றும் பகல் வேளைகளில் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி மணி வரை காற்றின் தரம் குறைவடைந்து காணப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

இந்தியா - பாகிஸ்தான் மோதல் தொடர்பில் வெளியான தகவல்கள்

இந்தியா - பாகிஸ்தான் மோதல் தொடர்பில் வெளியான தகவல்கள்

இலங்கையில் இன்றைய காற்றின் தரம் குறித்து வெளியான தகவல் | Today Air Quality Sri Lanka