மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து : மூன்று பேர் படுகாயம்
Sri Lanka Police
Accident
Death
By Raghav
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (06) பிற்பகல் நுவரெலியா, உடப்புசல்லாவ பிரதான வீதியிலுள்ள இராகலை - புரூக்சைட் பகுதியில் இடம்பெற்றது.
மேலதிக விசாரணை
குறித்த வாகனம் வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக இராகலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த சிறுவன், பெண் ஒருவர் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக இராகலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |