அரச உத்தியோகத்தர்களுக்கான சுற்றாடல் விழிப்புணர்வு நிகழ்வு
World Environment Day
Sri Lankan Peoples
Eastern Province
Clean Sri lanka
By Rakshana MA
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடங்களில் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த இந்த நிகழ்வானது, நேற்று (04) சுற்றாடல் அதிகார சபை மற்றும் பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாட்டில் தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
விழிப்புணர்வு நிகழ்வு
இதன்போது கத்தளாய் சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றாடல் உத்தியோகத்தர் வளவாளராக கலந்து கொண்டதுன், இங்கு பொலித்தீன் பாவனை குறைப்பு, பிளாஸ்டிக் பாவனை மூலம் ஏற்படும் பாதக விளைவுகள் தொடர்பில் தெளிவூட்டப்பட்டது.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் பீ.யூ.பீ.எல்.உடகெதர உட்பட சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



