மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிசிரிவி கமராவை திருடிய சிற்றூழியர் ஒருவர் கைது

Batticaloa Sri Lanka Police Investigation Crime
By Laksi Oct 12, 2024 01:20 PM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை திருடிய குற்றச்சாட்டின் பேரில் வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சிற்றூழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (11) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வைத்தியசாலையில் விடுதி ஒன்றின் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா ஒன்றை சம்பவ தினமான fடந்த வியாழக்கிழமை (10) இரவு இந்த சிற்றூழியர் கழற்றியமை சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

கிழக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

கிழக்கு ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்

சிற்றூழியர் கைது

இதனை அவதானித்த வைத்தியசாலை நிர்வாக பணிப்பாளர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிசிரிவி கமராவை திருடிய சிற்றூழியர் ஒருவர் கைது | Thieves Arrested In Hospital Stealing Cctv Camera

மேலும், குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் செலவு அறிக்கை சமர்ப்பிப்பிற்கான கால அவகாசம் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தல் செலவு அறிக்கை சமர்ப்பிப்பிற்கான கால அவகாசம் தொடர்பில் வெளியான தகவல்

சடுதியாக அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

சடுதியாக அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW