கற்பிட்டியில் நீரில் மூழ்கி மாணவன் பரிதாப மரணம்

Puttalam Sri Lanka Sri Lanka Police Investigation
By Laksi Sep 30, 2024 12:56 PM GMT
Laksi

Laksi

கற்பிட்டி - நுரைச்சோலை, ஹாஜராவத்தை பகுதியில் உள்ள குளம் ஒன்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலமானது நேற்று (29) மாலை மீட்கப்பட்டுள்ளதாக  நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ஹாஜராவத்தை பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹீம் முஹம்மத் எனும் 16 வயதுடைய மாணவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஊழல் மோசடிகளை ஆராய ஜனாதிபதி தலைமையில் விசேட விசாரணைப் பிரிவு

ஊழல் மோசடிகளை ஆராய ஜனாதிபதி தலைமையில் விசேட விசாரணைப் பிரிவு

உயிரிழப்பு

 உயிரிழந்த மாணவனும், அவரது சகோதரனும் லுஹர் தொழுகைக்காக மஸ்ஜிதுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, குளம் ஒன்றில் குளிப்பதற்காக சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கற்பிட்டியில் நீரில் மூழ்கி மாணவன் பரிதாப மரணம் | Student Drowned While Taking A Bath

இதன்போது, சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின், காணாமல் போன மாணவன் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

மருதமுனை தேர்தல் குழுவுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விசேட சந்திப்பு

மருதமுனை தேர்தல் குழுவுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விசேட சந்திப்பு

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் மரண விசாரணையை நடத்தி சடலத்தை பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

கற்பிட்டியில் நீரில் மூழ்கி மாணவன் பரிதாப மரணம் | Student Drowned While Taking A Bath

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவன் உயிரிழப்பு

காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவன் உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW