இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் தாதியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Sri Lankan Peoples Israel Ministry of Foreign Affairs - sri lanka
By Rakshana MA Apr 26, 2025 06:35 AM GMT
Rakshana MA

Rakshana MA

இஸ்ரேலில் வீட்டு தாதியர் துறையில் 2149 இலங்கை தாதியர் நிபுணர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனவரி 2025 முதல், 259 இலங்கையர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் ஏப்ரல் 28 ஆம் திகதி இஸ்ரேலுக்குச் செல்ல திட்டமிடப்பட்ட 7 பெண்களுக்கான விமான டிக்கெட்டுகள் நேற்று (25) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வழங்கப்பட்டன.

இலங்கையில் கடன் அட்டை பயன்பாட்டில் கட்டாயமாகும் புதிய நடைமுறை

இலங்கையில் கடன் அட்டை பயன்பாட்டில் கட்டாயமாகும் புதிய நடைமுறை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு

இதற்கிடையில், இஸ்ரேலில் ஹோட்டல் வீட்டு பராமரிப்பு மற்றும் துப்புரவுத் துறைகளில் வேலைவாய்ப்பு பெற்ற 77 வேலை தேடுபவர்களுக்கு விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்கவின் தலைமையில் அண்மையில் பணியகத்தில் நடைபெற்றது.

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் தாதியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Sri Lankan Nurses For Israel

இவர்களில் 28 பேர் ஏப்ரல் 28 ஆம் திகதி இஸ்ரேலுக்கும், மேலும் 49 பேர் ஏப்ரல் 29 ஆம் திகதி இஸ்ரேலுக்கும் புறப்பட உள்ளனர்.

அந்தக் குழுவுடன் சேர்ந்து, 180 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் ஹோட்டல் வீட்டு பராமரிப்பு மற்றும் துப்புரவுத் துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இஸ்ரேல் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலில் ஹோட்டல் வீட்டு பராமரிப்பு மற்றும் துப்புரவுத் துறை மற்றும் வீட்டு அடிப்படையிலான நர்சிங் சேவை வேலைகள் கிடைப்பதால், வேலை தேடுபவர்கள் இந்த வேலைகளைப் பெறுவதற்கு மற்றவர்களுக்கு பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு பணியகம் கேட்டுக்கொள்கிறது.

மஹபொல கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

மஹபொல கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு

இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW