சந்தைக்கு வெளியிடப்பட உள்ள 100,000 எரிவாயு சிலிண்டர்கள்
தற்போதைய எரிவாயு சந்தையில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 1,500 மெட்ரிக் தொன் எல்பி எரிவாயுவுக்கு சமமான 100,000 எல்.பி எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகிக்கப்படும் என்று வர்த்தகம், வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
எல்.பி எரிவாயுவை ஏற்றிச் செல்லும் இரண்டு மேலதிக கப்பல்கள் நாட்டிற்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
3,900 மெட்ரிக் தொன்களை ஏற்றிச் செல்லும் ஒரு கப்பல் பெப்ரவரி 25 ஆம் திகதியும், 3,700 மெட்ரிக் தொன்களை ஏற்றிச் செல்லும் மற்றொரு கப்பல் பெப்ரவரி 28 ஆம் திகதியும் நாட்டை வந்தடையும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தற்போதைய விநியோக பற்றாக்குறை குறித்து விவாதிக்க அமைச்சக அதிகாரிகளுக்கும் லாஃப்ஸ் எரிவாயு பிரதிநிதிகளுக்கும் இடையே இன்று ஒரு சிறப்பு சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்போது போதுமான விநியோகத்தை மீண்டும் தொடங்கத் தவறினால், நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு போதுமான அளவு இருப்பு இருப்பதை உறுதி செய்ய மார்ச் 12 ஆம் திகதி வரை நிறுவனத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.