உள்ளூராட்சி சபைத் தேர்தல்: நாளை முக்கிய தீர்மானம்!
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திகதி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.
அதன்படி, நாளைய தினம் (11.04.2023) ஆணைக்குழு கூடவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகளிடம் தொடர்ந்து பணம் கோரியதற்கு உரியப் பதில் இதுவரை கிடைக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்துக்குப் பதில் கிடைக்கவில்லை என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த வாரம் பிரதமருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்குத் தேர்தல்கள்
ஆணைக்குழு ஏற்கனவே தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.