நாட்டில் பல இடங்களில் கொட்டிதீர்க்கவுள்ள மழை

Climate Change Weather
By Rakshana MA Aug 12, 2025 03:17 AM GMT
Rakshana MA

Rakshana MA

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எதிர்வு கூறியுள்ளது.

திணைக்களத்தினால் இன்று (12.8.2025) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கு 1713 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கிழக்கு மாகாணத்திற்கு 1713 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கடும் மழை 

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பல இடங்களில் கொட்டிதீர்க்கவுள்ள மழை | Sri Lanka Weather Rain Wind Warning

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மாகாணங்கள், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.  

மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிழந்த இளைஞன்

மட்டக்களப்பில் மர்மமான முறையில் உயிழந்த இளைஞன்

அரசியல் கைதுகள் அரசுக்கு எதிராக மாறும் - மகிந்த எச்சரிக்கை

அரசியல் கைதுகள் அரசுக்கு எதிராக மாறும் - மகிந்த எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW