துறைமுக அதிகாரசபைக்கு அதிகரிக்கும் இலாபம்!
Colombo
Economy of Sri Lanka
Money
By Rakshana MA
இலங்கை துறைமுக அதிகாரசபை 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 66% லாப அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இது 2024 ஆம் ஆண்டில் ரூ.14.7 பில்லியனில் இருந்து ரூ.24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு துறைமுகம் 4 மில்லியனுக்கும் அதிகமான 20 அடி கொள்கலன்களைக் கையாண்டுள்ளது.
இலாபம்
இது ஆண்டு இறுதிக்குள் 8 மில்லியனைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும், அதே நேரத்தில் ஜயா கொள்கலன் முனையத்தின் ஐந்தாவது கட்டம், மேற்கு முனையம் மற்றும் கொழும்பு வடக்கு துறைமுகத்தில் எதிர்கால மேம்பாடுகள் துறைமுக திறனை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |