கூர்மையான ஆயுதத் தாக்குதலில் பலியான குடும்பஸ்தர்
Puttalam
Sri Lankan Peoples
Death
By Rakshana MA
புத்தளம் (Puttalam) - மாரவில, முதுகட்டுவ கடற்கரையில் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் இருவர் காயமடைந்து, மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆயுத தாக்குதல்
இந்த கொலை நேற்று (03) இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர் மாரவில பகுதியை சேர்ந்த 32 வயதுடையவராகும் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |