இலங்கையில் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு பாரிய சீர்திருத்தங்கள் தேவை
இலங்கையில் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு பாரிய சீர்திருத்தங்கள் தேவை என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முதல் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்
முன்னேற்றங்கள்
அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசாங்கத்தின் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்த செயல் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் முக்கியம்.
வெளிப்புறக் கடன் குறைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், உள்நாட்டுக் கடன் இன்னும் அதிகமாக உள்ளது. எனவே, இதைக் குறைக்க உறுதியான நிதிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
துணிச்சலான சீர்திருத்தங்கள் மற்றும் மக்களின் அர்ப்பணிப்பால், பொருளாதார ஸ்திரத்தன்மை மீண்டும் நிலைநாட்டப்படுகிறது.
எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இப்போது கிடைக்கின்றன.
பணவீக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வரி வருமானம் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |