ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சத்தியப்பிரமாண நிகழ்வு குறித்து வெளியான அறிவிப்பு
அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சத்தியபிரமாணமானது, கட்சியின் தலைவரும் நாடாளுமான்ற உறுப்பினருமான றஊப் ஹக்கீம் முன்னிலையில் நடைபெறவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
சத்தியபிரமாண நிகழ்வு
மேலும், இந்த நிகழ்வு தொடர்பான முன்னேற்பாட்டுக் கூட்டமானது, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் தலைமையில் நேற்று(15) ஒலுவில் க்ரீன் வில்லாவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற கௌரவ உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







