மண்சரிவு குறித்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் அயகம மற்றும் இரத்தினபுரி பிரதேசங்களுக்கு 02 ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு எச்சரிக்கை
01 ஆம் கட்டத்தின் கீழ், கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட, அங்கலவத்தை, பாலிந்தநுவர, புலத்சிங்கள மற்றும் மத்துகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கண்டி மாவட்டத்தின் கங்கைஹல கோரள, யட்டியந்தோட்டை, தெரணியகல, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட, அம்பகமுவ, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ மற்றும் எஹெலிய, எல்தௌரு, நிஹெலியகொ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 01 ஆம் கட்டத்தின் கீழ் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |