பாடசாலை மாணவர் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Fathima
யாழ்ப்பாண நகரில் காவல்துறையினர் நடத்திய விசேட சுற்றிவளைப்பு சோதனையின் போது 17 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறை நேற்று காலை நடத்திய சுற்றிவளைப்பில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
ஐஸ் போதைப் பொருளுடன் நான்கு பேரும் போதை மாத்திரைகளுடன் ஐந்து பேரும் கேரள கஞ்சாவுடன் ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் யாழ்ப்பாணம் காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.