ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு விஷேட துஆ பிராத்தனை

Ampara Anura Kumara Dissanayaka Eastern Province Kalmunai
By Laksi Sep 23, 2024 04:07 PM GMT
Laksi

Laksi

இலங்கையின் 9 ஆவது புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் இன்று இடம்பெற்றுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற அநுர குமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வினை முன்னிட்டு அவருக்கும் புதிய அரசாங்கத்தின் எதிர்கால வெற்றிக்கும் ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியால் இரு அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம்

புதிய ஜனாதிபதியால் இரு அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனம்

விசேட பிராத்தனை

இந்த விசேட பிராத்தனையானது தேசிய மக்கள் சக்தி கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா தலைமையில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்மா பள்ளிவாசலில் அஸர் தொழுகையின் பின்னர் இன்று (23) இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு விஷேட துஆ பிராத்தனை | Special Prayer For Inauguration Of The President

குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஒலுவில் , கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், மருதமுனை, நற்பிட்டிமுனை, மாளிகைக்காடு, பெரிய நீலாவணை , உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உட்பட பிரதேச இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.

வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் பதவி விலகல்

வடமேல் மாகாண ஆளுநர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் பதவி விலகல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery