சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு அளிக்க தீர்மானம்

Parliament of Sri Lanka Sri Lanka Parliament Sri Lanka Politician Iran-Israel War
By Rakshana MA Jun 18, 2025 05:28 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஈரான் - இஸ்ரேல் மோதல் குறித்து கருத்து வெளியிடுவதற்கு மறுத்த காரணத்தினால் சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடினை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம் (17) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது ஈரான் - இஸ்ரேல் மோதல் குறித்து கருத்து வெளியிடுவதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இடமளித்திருக்கவில்லை.

திருமலையில் விபத்து : சம்பவ இடத்தில் வைத்தியர் பலி

திருமலையில் விபத்து : சம்பவ இடத்தில் வைத்தியர் பலி

ஜனநாயக விரோதமான செயல்

அதன் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை மண்டபத்தில் இருந்து வெளிநடப்புச் செய்திருந்தனர்.  

இந்நிலையில் சபாநாயகரின் செயற்பாடு ஜனநாயக விரோதமானது என்று கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இது தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தில் முறைப்பாடு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு அளிக்க தீர்மானம் | Speaker Faces Global Complaint Sri Lanka

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா நேற்றைய தினம் மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.  

எரிபொருள் அச்சத்தை அதிகரிக்கும் ஈரான் - இஸ்ரேல் போர்..!

எரிபொருள் அச்சத்தை அதிகரிக்கும் ஈரான் - இஸ்ரேல் போர்..!

நபிவழி மருத்துவம் - வெங்காயம்

நபிவழி மருத்துவம் - வெங்காயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW