ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சிக்கே வெற்றி: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பகிரங்கம்

SLPP Johnston Fernando Mahinda Rajapaksa Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 03, 2024 11:27 AM GMT
Laksi

Laksi

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியே வெல்லும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மகிந்த ராஜபக்சவின் படத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் வந்தவர்களே கட்சி முடிவுக்கு எதிராகச் செயற்படுகின்றனர். அவர்கள் அவ்வாறு செயற்பட்டாலும் மக்களும், கட்சி ஆதரவாளர்களும் கட்சியுடன் தான் நிற்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொட்டுக் கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவு தெரிவித்துள்ள விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் வைத்து வழங்கப்படவுள்ள ஆலோசனை

தேர்தல்கள் ஆணைக்குழுவில் வைத்து வழங்கப்படவுள்ள ஆலோசனை

ஜனாதிபதி தேர்தல்

இதேவேளை, மகிந்த ராஜபக்சவிடம் தான் கட்சி இருப்பு உள்ளது. எனவே, யார் வெளியேறினாலும் கட்சி விழாது. சிலர் அரசியல் நாடகங்களை அரங்கேற்றுகின்றனர். அது விரைவில் தெரியவரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சிக்கே வெற்றி: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பகிரங்கம் | Slpp Win The Presidential Election Mahinda

எனவே ஜனாதிபதித் தேர்தலில் நாம் தான் வெல்வோம். புதிய வாக்குகளைப் பெறக்கூடிய வேட்பாளர் எமது வசமே உள்ளார். ஏனைய வேட்பாளர்களுக்கு புதிய வாக்காளர்களின் வாக்குகளைப் பெற முடியாது“ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு : ரணில் தெரிவிப்பு

நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு : ரணில் தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு: நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு: நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW