உலக முதுகெலும்பு தினத்தில் ஒரு விழிப்புணர்வு!
ஒவ்வோர் ஆண்டும் ஒக்டோபர் 16ஆம் திகதி உலக முதுகெலும்பு தினமாக (World Spine Day) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் நோக்கம், முதுகெலும்பு நலனின் முக்கியத்துவத்தை உணர்த்தி, முதுகு வலி மற்றும் நரம்பு-எலும்பு தொடர்பான நோய்களைத் தடுக்க மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்.
முதுகு வலிக்கான முக்கிய காரணங்கள்
மேலும், மனித உடலின் மையக் கம்பமாக செயல்படுவது முதுகெலும்பாகும். இது உடல் அமைப்பைச் சீராக வைத்திருப்பதுடன், நரம்புக் குழாய்களைப் பாதுகாக்கிறது. நமது உடல் நிமிர்ந்து நிற்பதற்கும், நடப்பதற்கும், வளைப்பதற்கும் இதுவே முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்நிலையில், இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பலர் நீண்ட நேரம் அமர்ந்தபடி பணிபுரிவது, சரியான உடற்பயிற்சி இல்லாமை, தவறான உடல் நிலைகள் (posture), அதிக எடை மற்றும் மன அழுத்தம் ஆகியவை முதுகு வலிக்கான முக்கிய காரணங்களாகின்றன.
அத்துடன் வேலை, வாசிப்பு, அல்லது மொபைல் மற்றும் கணினி பயன்படுத்தும் போது முதுகை நேராக வைத்திருத்தல், யோகா, நடைப்பயிற்சி, மற்றும் நீட்டிப்பு (stretching) பயிற்சிகள் முதுகு நலத்திற்கு உதவுகின்றன.
இந்நிலையில், கல்சியம் மற்றும் விட்டமின் D நிறைந்த உணவுகள் எலும்பை வலுவாக்குவதுடன் அதிக எடை முதுகில் அழுத்தத்தை ஏற்படுத்துதல் மற்றும் நீண்ட நேரம் அமர்ந்து இருத்தல், கனமான பொருட்களை தவறாக தூக்கும் பழக்கம் ஆகியன முதுகெலும்பு நலனை மிகவும் பாதிக்கின்றன.
மேலும், முதுகெலும்பு நோய்கள், நரம்பு செயலிழப்பு, கைகள் மற்றும் கால்கள் இயங்காமை ஆகிய அனைத்தும் ஒரே நாளில் நிகழும் விஷயமல்ல. தாமதமான சிகிச்சை வாழ்க்கை முழுவதையும் மாற்றி விடக்கூடும்.
சித்த மருத்துவத்தின் பக்கம் திரும்புவது ஒரு நம்பிக்கை ஒளியாகும்
இத்துடன், கட்டாயமாக ஆங்கில மருத்துவ சிகிச்சைகளை முதலில் மேற்கொள்ள வேண்டும். பின்னர், சித்த மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு சித்த மருத்துவ சிகிச்சை பெற்றிருந்தால், அவர்கள் முழுமையாக குணமடைய வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், சித்த மருத்துவத்தின் ஆழ்ந்த திறனை அறியாததாலும், இன்று பலர் சிக்கல்கலை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.
மற்றும் கைகள், கால்கள் இயங்காமல், இருக்கும் நிலையில் உள்ளனர். செயலிழந்த அங்கங்களுக்கு மீண்டும் உயிரூட்டும் சக்தி சித்தமருத்துவத்தில் உள்ளது என நம்பப்படுகிறது.

இப்படி வாழ்க்கை போராட்டத்தில் தோல்வி அடைந்தவர்களுக்காக, சித்த மருத்துவமும் சிறப்பாக பார்ப்பக்கடுகிறது.
இதில் குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான விடயம் என்னவென்றால் 14வது நாளில் சித்தமருத்துவ சிகிச்சைகளை ஆரம்பித்தல் 60 வது நாளில் ஆரம்பிப்பதிலும் கூடியளவு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
நாட்டிலுள்ள அரச சித்த மருத்துவமனைகள்
மேலும், பொரளை தேசிய ஆயுர்வேத வைத்தியசாலை, கைதடி மற்றும் கோணேசபுரியில் அமைந்துள்ள சித்த போதனா வைத்தியசாலைகள், கம்பஹா விக்கிரமராச்சி ஆயுர்வேத போதனா வைத்தியசாலை, மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை, கப்பல்துறை ஆதார வைத்தியசாலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி தளவைத்தியசாலை, மாதம்பே ஆதார மருத்துவமனை, மஞ்சந்தொடுவாய் மற்றும் நிந்தவூரில் அமைந்துள்ள யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி மருத்துவமனை, கொடிகாமம், பண்டத்தரிப்பு கிராமிய வைத்தியசாலை மேலும் பல அரச மருத்துவமனைகள் நாட்டில் சித்தமருத்துவ துறையில் காணப்படுகின்றன.

இவற்றுக்கு மேலதிகமாக அனைத்து பிரதேச சபைகளின் கீழே இயங்கும் இலவச சுதேச மருத்துவமனைகளினூடாக பொதுமக்கள் துல்லியமான சேவைகளை இலவசமாகப் பெற முடியும்.
நரம்பு நோய்கள்
அத்துடன், நரம்பு அமைப்பு (Nervous System) மனித உடலின் இயக்கம், உணர்வு, நினைவாற்றல் மற்றும் உட்புற உறுப்பு செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் முக்கிய அமைப்பாகும். இத்துறையில் ஏற்படும் கோளாறுகள் நரம்பு நோய்கள் (Neurological Disorders) எனப்படுகின்றன.

இந்நிலையில், சித்த மருத்துவம், உடல்-மனம்-ஆன்மா என்ற முப்பெரும் அலகுகளின் சமநிலையினை பேணுவதன் மூலம் நோய்களை குணப்படுத்தும் ஒருங்கிணைந்த மருத்துவ முறை என கூறப்படுகிறது.
சித்த மரபு மருத்துவக் கோட்பாட்டில், வாதம், பித்தம், கபம் எனும் மூன்று தோஷங்களின் சமநிலையே ஆரோக்கியத்தின் அடிப்படையாகும்.
மற்றும் நரம்பு நோய்கள் பெரும்பாலும் வாத துஷ்டி (Vatha Thoṣa Derangement) காரணமாகவே உருவாகின்றன.
வாதம் உடலின் இயக்க சக்தி, நரம்பு கடத்தல், சிந்தனை, உறக்க கட்டுப்பாடு போன்ற செயல்பாடுகளுக்குப் பொறுப்பாகும்.
வாதம் அதிகரிக்கும் காரணிகள்:
மேலும், குளிர்ச்சியான உணவு, நீண்ட நேர உழைப்பு, மன அழுத்தம், நரம்பு உளைச்சல், இரத்த ஓட்டக் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, நரம்பு தளர்ச்சி, அரைபக்கவாதம், Stroke, நரம்பு வலி, Neuropathy, Sciatica, நரம்பு நடுக்கம், Parkinsonism போன்ற நிலைகள் சித்த நூல்களில் நரம்பு சம்பந்தமான நோய்கள் பல பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சித்த சிகிச்சை மூன்றாகப் பிரிக்கப்படுகிறது:
1.நித்திய நலம் – உடல் சமநிலையைப் பேணுதல்
2.நோய் நீக்கம் – காரண வாதத்தைச் சமப்படுத்துதல்
3.மீளச்சீராக்கம் – நரம்பு மறுசீரமைப்பு (Neuroregeneration)
இம் மூன்றும் பின்வரும் முறைகளை வைத்து உடலைப் போசிக்கின்றன.
உள்சிகிச்சைகள் (Internal Medicines) - சில மருந்துகளின் உயிரியல் விளைவுகள் (Biological Effects) சமீபத்திய ஆய்வுகளில் antioxidant, neuroprotective, anti-inflammatory, adaptogenic என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
புறசிகிச்சைகள் (External Therapies)- நரம்பு சீரமைப்பில் புற சிகிச்சைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அத்துடன், ஆதரவு சிகிச்சைகள்- யோகாசனம் & பிராணாயாமம் – இவை நரம்பு அழுத்தத்தை குறைத்து மன அமைதி அளிக்கின்றன. உணவியல் (Dietotherapy) – குளிர்ச்சியான, புளிப்பான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
இத்துடன், நவீன ஆய்வுகள் சித்த மருந்துகளில் காணப்படும் மூலிகைகள் (e.g. Withania somnifera, Moringa oleifera, Nardostachys jatamansi) நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும் neuroprotective, anti-oxidant, anti-inflammatory செயல்பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை நிரூபித்துள்ளன என அரசு வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் நரம்பியல் பிரிவினர்(வாதநோயியல் அபிவிருத்திப் பிரிவு) குறித்த விழிப்புணர்வை வழங்கியுள்ளனர்.