நாட்டில் அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடாகும் முக்கிய மருந்துகள்
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
Medicines
By Rakshana MA
நாட்டில் முக்கியமான நோய்களுக்கான பல்வேறு மருந்துகளுக்கு அரச மருத்துமனைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் மருந்துகள் வழங்கல் பிரிவு இதற்கான நினைவூட்டல் கடிதமொன்றை சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.
மருந்து தட்டுப்பாடு
அதன்படி, நோய்எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள், வலி நாசினி, இன்சியூலின், இருதய நோய்க்கான மருந்துகள் உள்ளிட்ட சுமார் 180 வகையான மருந்துகளுக்கு இவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் சுகாதார சேவைகளை மேற்கொள்வதற்கான பல்வேறு உபகரணங்களுக்கும் அரசாங்க மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |