அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு

Ampara Sri Lanka Police Investigation Kalmunai
By Laksi Sep 18, 2024 11:42 AM GMT
Laksi

Laksi

அம்பாறை - கல்முனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (18) காலை காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் தரம் 9இல் கல்வி பயிலும் 14 வயது மாணவியே உயிரிழந்துள்ளார்.

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

மேலதிக விசாரணை

இந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் தந்தையுடன் பயணித்துக் கொண்டிருந்த மாணவியின் மீது தனியார் போக்குவரத்து பேருந்து ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு | Schoolgirl Died In An Accident In Sammanthurai

இதனையடுத்து,  குறித்த பேருந்தின் சாரதி தற்போது  காரைதீவு பொலிஸில் சரணடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காரைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புத்தளத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம்

புத்தளத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம்

ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிகரிக்கும் முறைப்பாடுகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்து அதிகரிக்கும் முறைப்பாடுகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW