இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நன்றி தெரிவித்த சனத்

Lasith Malinga Sanath Jayasuriya Sri Lanka Cricket
By Rukshy Aug 08, 2024 10:37 AM GMT
Rukshy

Rukshy

இலங்கையின் இடைக்கால பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா, 27 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி வரலாற்றுச் சாதனை படைத்து  ஒருநாள் தொடரை வென்றதைத் தொடர்ந்து, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான குமார் சங்கக்கார மற்றும் லசித் மலிங்காவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதனை தனது எக்ஸ் தளத்தில் சனத் ஜெயசூர்யா பதிவிட்டுள்ளார்.

வாஸ் குணவர்தன உள்ளிட்டோருக்கான மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

வாஸ் குணவர்தன உள்ளிட்டோருக்கான மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

முதல் தரவரிசை அணி

அதில் “சங்கா மற்றும் லசித் மலிங்கா தந்த ஆதரவு மற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தியதற்காக சிறப்பு நன்றி. உங்கள் பங்களிப்பு எங்களுக்கு விலைமதிப்பற்றது“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

,இந்நிலையில். Zoom மூலம் இலங்கையின் பந்துவீச்சாளர்களுடன் தொடர்ந்து ஈடுபட்டு, தொடர் முழுவதும் பந்துவீச்சு உத்திகள் குறித்த வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம் மலிங்கா முக்கிய பங்கு வகித்துள்ளார்.

மேலும் உலகின் முதல் தரவரிசை அணிக்கு எதிரான தொடர் வெற்றியைப் பாதுகாப்பதில் முக்கியமான கூறுகளை இணைப்பதில் சங்கக்காரவும் முக்கிய பங்கு வகித்தார் என்றும“ குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி: வெளியான தகவல்

வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி: வெளியான தகவல்

அம்பாறையில் வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

அம்பாறையில் வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW