சம்மாந்துறையில் குற்றச் செயல் அதிகரிப்பு : பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை (Sammanthurai) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், அண்மைக் காலமாக வீடுகளை உடைத்து திருடும் சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத செயல்கள் கணிசமாக அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய திருட்டுச் சம்பவங்கள் பெரும்பாலும் வீட்டு உரிமையாளர்கள் வீட்டை விட்டு வெளியேறும் நேரங்களில் நடைபெறுவதாகவும், குறிப்பாக இரவு நேரங்களில் வீட்டு ஜன்னல்கள் உடைக்கப்படுவதால், இது திட்டமிட்டு செயல்படும் குழுவின் செயல் என சந்தேகிக்கப்படுகிறது.
பொலிஸாரின் அறிவுறுத்தல்
பொலிஸாரின் தகவலின்படி, ஜன்னல் உடைக்கும் குழுவினர் சம்மாந்துறைப் பிரதேசத்தில் தொடர்ந்து நடமாடுகின்றனர் என்பதற்கான தகவல்களும் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அதிகமாக அவதானமும் விழிப்பும் கொண்டிருக்க வேண்டும். இரவு வேளைகளில் சந்தேகத்திற்குரிய நபர்கள் அல்லது அசாதாரண நகர்வுகள் தென்பட்டால், உடனடியாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொள்ள வேண்டும்.
இச்சம்பவங்களை கட்டுப்படுத்த, பொலிஸ் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும், பொதுமக்களின் ஒத்துழைப்பே குற்றத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய அம்சமாகும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |