கிண்ணியா நகர சபையில் வருவாய் அதிகரிப்பு குறித்து பணியாளர் கலந்துரையாடல் முன்னெடுப்பு
கிண்ணியா நகர சபை உத்தியோகத்தர்களுடனான முதலாவது கலந்துரையாடல் நடைப்பெற்றது.
குறித்த கலந்துரையாடலானது, கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில், நகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடன் நேற்று (20) நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
விசேட கலந்துரையாடல்
இந்த சந்திப்பில், நகர சபையின் வருமானத்தை அதிகரிக்கும் வழிகள், அந்த நோக்கத்தில் உத்தியோகத்தர்களின் பங்களிப்பு, ஒழுங்கமைக்கப்பட்ட நிர்வாக நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.
நகர சபை செயலாளர் உள்ளிட்ட பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்று, தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்துள்ளனர்.
இந்த கலந்துரையாடல், திறம்பட செயல்படும் ஒரு நவீன உள்ளூராட்சி நிர்வாகத்திற்கு அடித்தளமாக அமையும் என்ற நம்பிக்கையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



