அரச ஊழியர்கள் குறித்து வெளிவந்துள்ள தகவல்

Government Employee Sri Lankan Peoples Money
By Rakshana MA Apr 29, 2025 04:23 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் அரச மற்றும் அரை - அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளதாக தெரியவருகிறது.

2024ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஆரம்ப அறிக்கையின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும், அரச மற்றும் அரை - அரச துறைகளில் மொத்தம் 1,150,018 ஊழியர்கள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊழியர்களில் 50.5% ஆண்கள் மற்றும் 49.5% பெண்கள் என அறிக்கை குறிப்பிடுகிறது.

காத்தான்குடியில் வியாபார நிலையங்களை மூடுமாறு கோரிக்கை

காத்தான்குடியில் வியாபார நிலையங்களை மூடுமாறு கோரிக்கை

அரச ஊழியர்களின் எண்ணிக்கை 

2016ஆம் ஆண்டுக்குப் பின், அனைத்து அரச மற்றும் அரை - அரச துறை நிறுவனங்களின் ஊழியர்களின் முழுமையான ஆய்வு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.

அரச ஊழியர்கள் குறித்து வெளிவந்துள்ள தகவல் | Salary Hike For Gov Employees

இதன்படி, அரசத் துறையில் 938,763 ஊழியர்களும், அரை - அரசத் துறையில் 217,255 ஊழியர்களும் பணியாற்றுவது கண்டறியப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு ஆய்வின்படி, அரச மற்றும் அரை - அரசத் துறைகளில் மொத்தம் 1,119,475 ஊழியர்கள் இருந்தனர். 2024 ஆய்வில் இந்த எண்ணிக்கை 46,543ஆல் அதிகரித்துள்ளது.

வரி வருவாயில் இலங்கை அடைந்துள்ள உச்சம்!

வரி வருவாயில் இலங்கை அடைந்துள்ள உச்சம்!

மத்திய அரசின் கீழ் பணியாற்றுவோர்

இந்த அறிக்கையின்படி, அரசத் துறையில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானோர் (59.5%) மத்திய அரசின் கீழ் பணியாற்றுகின்றனர்.

இந்த ஆய்வில் சுமார் 32,500 அரச மற்றும் அரை - அரச நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்கள் குறித்து வெளிவந்துள்ள தகவல் | Salary Hike For Gov Employees

எவ்வாறாயினும், அரை - அரச நிறுவனங்களின் துணை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இராணுவம், கடற்படை, மற்றும் விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த ஊழியர்களும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை என்பதுடன், அரை - அரசத் துறையில் உள்ள தோட்டத் துறை தொழிலாளர்களும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

டெங்குவினால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்குவினால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இன்று அழிக்கப்படவுள்ள 494 கிலோ போதைப்பொருட்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

இன்று அழிக்கப்படவுள்ள 494 கிலோ போதைப்பொருட்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW