திருடர்களுடன் டீல் இல்லாத காரணத்தினால் நாட்டை பொறுப்பேற்கவில்லை: சஜித் பகிரங்கம்

SJB Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 05, 2024 11:59 AM GMT
Laksi

Laksi

கடந்த காலத்தில் திருடர்களுடன் டீல் இல்லாத காரணத்தினாலும், அவர்களுடன் சேர்ந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதாலும் நாட்டை பொறுப்பேற்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தாமே நாட்டின் மாற்று சக்தி என்று கூறிக்கொள்கின்றவர்களும் ஜனாதிபதியின் ஆட்களும் என்னை விமர்சிக்கின்றார்கள்.

நாட்டிற்கு சிறந்த ஜனாதிபதியாக ரணில் திகழ்வார்: அன்வர் எம் முஸ்தபா சுட்டிக்காட்டு

நாட்டிற்கு சிறந்த ஜனாதிபதியாக ரணில் திகழ்வார்: அன்வர் எம் முஸ்தபா சுட்டிக்காட்டு

நாட்டுக்காக சேவை

பாடசாலைகளை அபிவிருத்தி அடைய செய்கின்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்தபோதும் என்னை விமர்சித்தார்கள். நான் அதிகாரத்திற்கு வந்தவுடன் அனைத்து பாடசாலைகளையும் அபிவிருத்தி அடையச் செய்வேன்.

திருடர்களுடன் டீல் இல்லாத காரணத்தினால் நாட்டை பொறுப்பேற்கவில்லை: சஜித் பகிரங்கம் | Sajith Election Meeting In Puttalam

76 வருட காலம் குறித்து பேசும் வாய்ச் சொல்லாளர்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு வேலை செய்யாதிருந்தனர்.

எனினும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர் நாட்டுக்காக சேவை செய்யும் முறையை மாற்றியமைத்தனர் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகியுள்ள முஸம்மில்

ஊவா மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகியுள்ள முஸம்மில்

நாமல் உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடு! விசாரணைக்கான திகதி தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்

நாமல் உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடு! விசாரணைக்கான திகதி தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW