வெளியான பெறுபேறுகளில் சாதனை படைத்துள்ள சாய்ந்தமருது லீடர் வித்தியாலயம்!
அண்மையில் வெளியாகிய ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தின் 10 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரீட்சையில் சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றிய 59 மாணவர்களில் 49 மாணவர்கள் 70 க்கு மேல் புள்ளிகள் பெற்று சித்தி (சித்தி வீதம் 82.45) சித்தி அடைந்துள்ளனர்.
கோட்டமட்ட சாதனை
மேலும், பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சம்சுதீனின் சிறப்பு வழிகாட்டலின் கீழ் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களின் பயிற்சி ஊக்குவிப்பினால், இம்முறை அதிக மாணவர்கள் சித்தி அடைந்ததுடன் கடந்த காலங்களில் கோட்டமட்ட சாதனைகளையும் இந்த பாடசாலை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 


 
                                        
                                         
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
     
    