ஈராக்கிலுள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல்

United States of America Iraq World
By Laksi Aug 07, 2024 09:33 AM GMT
Laksi

Laksi

ஈராக்கில் உள்ள அமெரிக்க தளம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதில் 7 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது நேற்று (6) அல்-அசாத் முகாமை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஐந்து அமெரிக்க சேவை உறுப்பினர்கள் மற்றும் இரண்டு அமெரிக்க ஒப்பந்ததாரர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான தகவல்

விசாரணைகள்

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லொயிட் ஒஸ்டின் கருத்து தெரிவிக்கையில், தனது படை வீரர்களுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்றார்.

ஈராக்கிலுள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல் | Rocket Attack On Us Base In Iraq

அத்தோடு, ஏவுவதற்கு தயாராக இருந்த 8 ஏவுகணைகளுடன் கூடிய கனரக வாகனமொன்றும் அந்நாட்டு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், இராணுவ தளத்தை தாக்கிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஈராக் அரசாங்கத்தின் பாதுகாப்பு ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

பங்களாதேஷில் முன்னாள் பிரதமரை விடுவிக்க நடவடிக்கை

பங்களாதேஷில் முன்னாள் பிரதமரை விடுவிக்க நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW