யாழில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டத்தில் ஆவேசமடைந்த ரிஷாட்

Jaffna Risad Badhiutheen Sajid Javid sri lanka presidential election 2024
By Laksi Sep 16, 2024 06:03 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் திடீரென ஆவேசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவமானது நேற்றையதினம் (15) யாழ்ப்பாணம் - மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

எதிர்க்கட்சித் தலைவரின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

ஆவேசமடைந்த ரிஷாத்

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ரிஷாட் பதியுதீன் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவருக்காக ஒதுக்கிய நேரம் நிறைவடைந்து விட்டதாக கடதாசியில் எழுதி அவருக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ளது.

யாழில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டத்தில் ஆவேசமடைந்த ரிஷாட் | Rishad Angry At Sajith S Campaign Platform Jaffna

அதனை படித்துப் பார்த்த ரிஷாட் பதியுதீன், அந்த கடதாசியை எடுத்து ஆவேசத்துடன் கீழே வீசிவிட்டு தனது உரையை முடித்துவிட்டு ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

இந்நிலையில், அவரது இந்த செயற்பாடானது மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வரும் தமது நாட்டவர்களுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை வரும் தமது நாட்டவர்களுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியீடு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியீடு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW