நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Sep 24, 2024 02:19 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள புதிய ஜனாதிபதி

கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள புதிய ஜனாதிபதி

மின்னல் தாக்கம்

இந்நிலையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை | Rainy Weather In Many Parts Of Country

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு விஷேட துஆ பிராத்தனை

ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு விஷேட துஆ பிராத்தனை

சாய்ந்தமருதை சீண்டிய ஹக்கீம் மீது சட்டநடவடிக்கை

சாய்ந்தமருதை சீண்டிய ஹக்கீம் மீது சட்டநடவடிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW