தொடரும் மழையுடனான வானிலை

Sri Lanka Sri Lankan Peoples Department of Meteorology Climate Change
By Rukshy Apr 16, 2025 03:12 AM GMT
Rukshy

Rukshy

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் காலை வேளையில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கிழக்கு மக்களின் காணிகளுக்கு ஆளும் தரப்புக்களால் நேர்ந்த கதி!

கிழக்கு மக்களின் காணிகளுக்கு ஆளும் தரப்புக்களால் நேர்ந்த கதி!

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது

மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

தொடரும் மழையுடனான வானிலை | Rainy Weather Continues

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய நிலையும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் : 7 பேர் உயிரிழப்பு

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் : 7 பேர் உயிரிழப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் சிறப்பு அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் சிறப்பு அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW