திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவி தெரிவு
Law and Society Trust
Trincomalee
Sri Lankan Peoples
Law and Order
By H. A. Roshan
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்வில் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் 2025/2026 இற்கான சங்க தலைவியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தெரிவானது நேற்று (25) திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
சங்க தலைவி
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக தெரிவாகிய இவர் திருகோணமலையை வசிப்பிடமாகக் கொண்டவரும், யாழ்பாணம் - காரை நகரை பிறப்பிடமாக கொண்டவர் ஆவார்.
மேலும், இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 2005ஆம் ஆண்டு சட்டமானி பட்டத்தினையும் 2006ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற சட்டதரணியாக பதவி ஏற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |