மட்டக்களப்பில் சிறுவர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

Batticaloa Children's Day SL Protest
By Laksi Oct 01, 2024 11:41 AM GMT
Laksi

Laksi

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் உள்ள சிறுவர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் இன்று (01) காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது,  இறுதி யுத்தத்தின்போது ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களுக்கான நீதி கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களின் மனநிலையை வளப்படுத்துவதில் அதீத அக்கறை கொள்ள வேண்டும்: ரிஷாட்

சிறுவர்களின் மனநிலையை வளப்படுத்துவதில் அதீத அக்கறை கொள்ள வேண்டும்: ரிஷாட்

ஆர்ப்பாட்டம் 

அத்தோடு, இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ்தான் பதில் என்றால் கொலை செய்தவன் யார்?, பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே இறந்து கொண்டு இருக்கின்றோம், கையளிக்கப்பட்ட சகோதரங்கள் எங்கே? என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பில் சிறுவர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு | Protest For Children S Justice In Batticaloa

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் நாளை மறு தினம் பூட்டு

நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளுக்கும் நாளை மறு தினம் பூட்டு

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற நானே முயற்சித்தேன்: சாணக்கியன்

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற நானே முயற்சித்தேன்: சாணக்கியன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW