கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11ஆவது உபவேந்தர் நியமிப்பு
கிழக்கு பல்கலைக்கழத்தின் 11ஆவது உபவேந்தராக நியமிக்கப்பட்ட முன்னாள் விஞ்ஞான பீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் நேற்று (17) தனது கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார்.
குறித்த பல்கலைக்கழகத்தின் 11ஆவது உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை பல்கலைக்கழகத்தின் பேரவையினால் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்றது.
உபவேந்தர் நியமிப்பு
இதில் 8 பேர் போட்டியிட்ட நிலையில் முதல் நிலையில் முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன், உட்பட 3 பேர் தெரிவு செய்யப்பட்டு பல்கலைகழக மானிய ஆணைக் குழுவிற்கு அனுப்பிய அந்த பெயர்பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.
இதனடிப்படையில் முதல் நிலையிலுள்ளதையடுத்து முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபனை ஜனாதிபதி கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11ஆவது உபவேந்தராக நியமித்து அதற்கான கடிதத்தினை நேற்று (17) அனுப்பிவைத்துள்ளார்.
இதனையடுத்து புதிய உபவேந்தர் நேற்று பகல் 12.00 மணியளவில் தமது கடமையை உத்தியோக பூர்வமாக பெறுப்பேற்றுக் கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |