நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோட்டம்

Batticaloa Kilinochchi Sri Lanka Police Investigation Crime Prison
By Laksi Aug 27, 2024 07:18 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி நீதிமன்ற வளாகத்திலிருந்து கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (26) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு உட்பட பல இடங்களில் கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற தண்டணை வழங்கப்பட்டு மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த கைதியே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.

குறைவாக உள்ள கடவுச்சீட்டுப் புத்தகங்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

குறைவாக உள்ள கடவுச்சீட்டுப் புத்தகங்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தப்பியோட்டம்

குறித்த கைதியை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்.

நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோட்டம் | Prisoner Escapes From Kaluvanchikudi Court

இந்த நிலையில், அவர்  கழிவறைக்கு செல்ல வேண்டுமென கூறியதால் சிறைக்காவலர் அழைத்துச் சென்றுள்ள நிலையில் கழிவறை கூரையை கழற்றி அதனூடாக தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழப்பு

தேடுதல் நடவடிக்கை

இதன்போது, கிளிநொச்சி, இரணைமடு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே தப்பியோடியுள்ளார்.

நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோட்டம் | Prisoner Escapes From Kaluvanchikudi Court

இதனையடுத்து அவரை கைது செய்ய பொலிஸாரும், சிறைக்காவலர்களும் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழப்பு

பிரதான அரச வருமான மூலங்களில் பாரிய நிலுவைத் தொகையா..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

பிரதான அரச வருமான மூலங்களில் பாரிய நிலுவைத் தொகையா..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW