ஆட்சியைக் கைப்பற்றியதும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படும்: ரிஷாட் பதியுதீன்

Risad Badhiutheen Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 02, 2024 11:02 AM GMT
Laksi

Laksi

ஆட்சியைக் கைப்பற்றிய அடுத்த கணமே அதிகாரப்பகிர்வு மற்றும் சமூகங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட நாம் அமோக ஆதரவுடன் சஜித் பிரேமதாசவை வெல்ல வைக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மைச் சமூகங்களின் அமோக ஆதரவுடன் சஜித் பிரேமதாசவை வெல்ல வைக்க வேண்டும். மன்னார், வவுனியா மாவட்டங்களிலுள்ள சகல சமூகங்களதும் தெரிவாக சஜித்  இருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டிலுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மக்களின் பிரச்சினைகள்

இது குறித்து றிசாட் மேலும் தெரிவிக்கையில், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் நாளாந்த தொழிலாளர்கள் வாழும் இந்தப் பிரதேசத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அயல்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களால் அதிகம் பாதிக்கப்படுவது மன்னார் மாவட்டமே.

ஆட்சியைக் கைப்பற்றியதும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படும்: ரிஷாட் பதியுதீன் | Presidential Election Rishad Support For Sajith

இது குறித்து, எமது வேட்பாளர் சஜித்திடம் விளக்கியுள்ளோம். அவரது ஆட்சியில் இதற்கு தீர்வு கிடைக்கும்.

ஆறு தடவைகள் பிரதமராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்க. எமது மக்களின் பிரச்சினைகள் எவற்றையும் அவர் தீர்க்கவில்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை தந்திரமாக இழுத்தடித்தார்.

இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ள வாக்காளர்கள் அட்டைகள்

இன்று முதல் விநியோகிக்கப்படவுள்ள வாக்காளர்கள் அட்டைகள்

சஜித்திற்கு ஆதரவு

சமூகப் பிரச்சினைகளை சில்லறைக்காசுச் சொகுசுகளால் தீர்க்கவே முடியாது. வாக்குகளில்லாத சிலர் அவரவர் வாய்ப்புகளுக்காகவே ரணிலை ஆதரிக்கின்றனர்.

ஆட்சியைக் கைப்பற்றியதும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்படும்: ரிஷாட் பதியுதீன் | Presidential Election Rishad Support For Sajith

விரட்டியடிக்கப்பட்ட கோட்டாவின் எஞ்சிய கால ஆட்சியை, எச்சில் ஆசைகளுக்காகப் பயன்படுத்துவோரை ஆட்சியிலிருந்து விரட்டுவோம்.

பரந்தும் விரிந்தும் கிடக்கும் வடமாகாண பூமியில், சுற்றுலாத் தளங்களை உருவாக்கி, வாழ்வாதரத்தைப் பலப்படுத்த சஜித் பிரேமதாசவைப் பலப்படுத்துங்கள் என்று ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW