பதுளை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்!

Badulla Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 22, 2024 07:39 AM GMT
Laksi

Laksi

தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பதுளை மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 23,629 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,967 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 7,757 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 598 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

திலித் ஜயவீர 151 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பதுளை தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பதுளை மாவட்டத்தின் பதுளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 17983 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 14309 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10729 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 806 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

திலித் ஜயவீர 378 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான வெற்றியை நோக்கி நகரும் அநுர

நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான வெற்றியை நோக்கி நகரும் அநுர

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW