அரச உத்தியோகத்தர்களின் அதிகமான வாக்கு ரணிலுக்கே : காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

Ranil Wickremesinghe Kanchana Wijesekera Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 07, 2024 08:16 AM GMT
Laksi

Laksi

அரச உத்தியோகத்தர்களின் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களித்துள்ளனர் என மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை மொரவக்க பிரதேசத்தில் நேற்று (06) நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ''பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 191 மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாக்காளர்கள் அட்டை விநியோகிக்கும் பணிகள் குறித்து வெளியான தகவல்

வாக்காளர்கள் அட்டை விநியோகிக்கும் பணிகள் குறித்து வெளியான தகவல்

ஐக்கிய மக்கள் சக்தி

ஆனால் மாத்தறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவின் 196 உள்ளுராட்சி சபை உறுப்பினர்களே உள்ளனர். பொதுஜன பெரமுனவில் 8 மாகாண சபை உறுப்பினர்கள் இருந்தனர்.அவர்களினல் 90 வீதமான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் தான் உள்ளனர்.

அரச உத்தியோகத்தர்களின் அதிகமான வாக்கு ரணிலுக்கே : காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு | President Election Sri Lanka Ranil

சவால்களை ஏற்காது ஓடியவர்கள் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வந்தால் எம்மை காப்பாற்றுவார்கள் என்று நம்ப முடியுமா?

ஐக்கிய மக்கள் சக்தி பல துண்டுகளாக உடைந்துள்ளன. கண்டியில் ஒரு கொள்கையை வெளியிடுகிறார்கள். கொழும்பில் வேறொன்றை வெளியிடுகிறார்கள்" என்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்தமைக்கு ஹக்கீமின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்தமைக்கு ஹக்கீமின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

அதிகரிக்கும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்

அதிகரிக்கும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW