றிசாட் பதியுதீன் - அதாவுல்லா ஆதரவாளர்களிடையே கடும் மோதல்
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Eastern Province
Crime
Local government Election
By Rakshana MA
அம்பாறை - சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேசிய காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தில் இடம்பெற்ற மோதலில் கட்சியின் வீரமுனை வட்டார வேட்பாளர் உட்பட இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிரசாரக் கூட்டம்..
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களே தங்களைத் தாக்கியதாக தேசிய காங்கிரஸ் தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



