மழைச்சாரல் தொடர்கிறது கவிதை நூல் வெளியீடு

Eastern Province
By Rakshana MA Oct 21, 2024 07:43 AM GMT
Rakshana MA

Rakshana MA

தோப்பூர் ஷாக்கிர் கிலுறுதீன் எழுதிய "மழைச்சாரல் தொடர்கிறது" என்ற கவிதை நூல் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், முன்னாள் பீடாதிபதியுமான எம்.எல்.பௌசுல் அமீர் தலைமையில் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (20) தோப்பூர், தி/மு/ பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் தோப்பூர் கலை இலக்கியப் பேரவையின் அனுசரணையோடு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

தென் பிராந்தியங்களிலிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

தென் பிராந்தியங்களிலிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

சாதனையாளரான பட்டதாரி

ஜாமிஆ நளீமிய்யாவின் பட்டதாரி ஷாக்கிர் கிலுறுதீன் எழுதிய இந்நூலானது தோப்பூர் கலை இலக்கியப் பேரவையின் மூன்றாவது வெளியீடாகும்.

மழைச்சாரல் தொடர்கிறது கவிதை நூல் வெளியீடு | Poetry Book Publication Thoppur Shakir Kiluruddin

இந் நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் பீ. ஹாஜா முகைதீன் கலந்து கொண்டதுடன் முதல் நூல் பிரதியை பிரபல தொழிலதிபரும், அல் - மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவருமான எஸ்.எச்.ஜெஸாஹீருக்கு வழங்கி வைத்துள்ளார்.

இந் நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மூத்த கல்விமான்கள், புத்திஜீவிகள், உலமாக்கள், கலை இலக்கியப் பேரவை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், , இலக்கியவாதிகள், நலன்விரும்பிகள், ஊர் பிரமுகர்கள், நூலாசிரியரின் நண்பர்கள் மற்றும் நளீமிய்யா நண்பர்கள் போன்ற பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிக்கு கொடுத்த அவகாசம் நாளையுடன் நிறைவு: மீண்டும் நினைவுப்படுத்தும் கம்மன்பில

ஜனாதிபதிக்கு கொடுத்த அவகாசம் நாளையுடன் நிறைவு: மீண்டும் நினைவுப்படுத்தும் கம்மன்பில

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGalleryGalleryGalleryGallery