மட்டக்களப்பில் தொடருந்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Jul 24, 2024 04:52 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு - வந்தாறுமூலை பகுதியில் தொடருந்து பாதையில் அமர்ந்து மது அருந்திய இளம் குடும்பஸ்தர் ஒருவர் தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தையின் தந்தையான 29 வயதுடைய பாக்கியராசா பிரசாந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் ஆலயத்திற்கு சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் ஆலயத்திற்கு சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மரண விசாரணை

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு சென்ற தொடருந்திலேயே குறித்த நபர் மோதியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பில் தொடருந்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி | Person Drank Alcohol On Railway Line Was Killed

இந்தநிலையில், மரண விசாரணை நடைபெற்றதையடுத்து சுமார் நான்கு மணித்தியாலத்தின் பின்னரே அந்த பாதையில் தொடருந்துகள்  பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் விசேட சுற்றிவளைப்பு: 13 பேர் கைது

யாழில் விசேட சுற்றிவளைப்பு: 13 பேர் கைது

மேலதிக விசாரணை

இதனையடுத்து, குறித்த நபரது உடலை அவரது குடும்ப உறவினர்கள் அடையாளங்காட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் தொடருந்தில் மோதி இளம் குடும்பஸ்தர் பலி | Person Drank Alcohol On Railway Line Was Killed

இந்த சம்பவம் தொடர்பில், ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.    

மன்னாரில் இராணுவ சிப்பாய் உட்பட நால்வர் கைது

மன்னாரில் இராணுவ சிப்பாய் உட்பட நால்வர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW